Posts

ராசி பலன் 2020 - சிம்மம்

Image
வணக்கம் நண்பர்களே , ஜோதிடத்தின் மீதான எனது ஆர்வத்தின் காரணமாக Astro Sid எனும் YouTube சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறேன்.ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்து பயனடைய வேண்டுகிறேன். 

ராசி பலன் 2020 - கடகம்

Image
வணக்கம் நண்பர்களே , ஜோதிடத்தின் மீதான எனது ஆர்வத்தின் காரணமாக Astro Sid எனும் YouTube சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறேன்.ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்து பயனடைய வேண்டுகிறேன். 

ராசி பலன் 2020 - மிதுனம்

Image
வணக்கம் நண்பர்களே , ஜோதிடத்தின் மீதான எனது ஆர்வத்தின் காரணமாக Astro Sid எனும் YouTube சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறேன்.ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்து பயனடைய வேண்டுகிறேன்.

ராசி பலன் 2020 - ரிஷபம்

Image
வணக்கம் நண்பர்களே , ஜோதிடத்தின் மீதான எனது ஆர்வத்தின் காரணமாக Astro Sid எனும் YouTube சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறேன்.ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்து பயனடைய வேண்டுகிறேன்.

ராசி பலன் 2020 - மேஷம்

Image
வணக்கம் நண்பர்களே , ஜோதிடத்தின் மீதான எனது ஆர்வத்தின் காரணமாக Astro Sid எனும் YouTube சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறேன்.ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்து பயனடைய வேண்டுகிறேன்.

கலியுக முடிவு

Image
கலியுக முடிவு          கால ஓட்டத்திற்கேற்ப மாறுவது என்ற அடிப்படையில் சமீபத்தில் YouTube சேனல் ஒன்று தொடங்கினேன்.அதில் தொடர்ந்து பதிவுகள் போட்டும் வருகிறேன்.அதில் சமீபத்தில் போட்ட பதிவு கலியுகம் பற்றியது.மஹாவதார் பாபாஜியின் சீடரான ஸ்ரீ லாஹிரி மஹாசயரின் நேரடி சீடர் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி.அவருடைய எழுதிய புத்தகத்தில் யுகக் கணக்கை பற்றி வெகு தெளிவாக விளக்கியுள்ளார்.கலியுகம் என்பது 1200 வருடமே அன்றி அனைவரும் சொல்வதைப்போல 4,32,000 வருடங்கள் அல்ல என்பதை அற்புதமாய் விளக்கியுள்ளார்.அதன் சாராம்சத்தை இந்த YouTube பதிவில் பார்க்கலாம்.

பாண்டிக்குட்டி தொடர்ச்சி

பா.கு மனதில் மின்னல் போல ஒரு எண்ணம் பளிச்சிட்டது."பேசாம வீட்டை விட்டு ஓடி போயிருவோம் " என்று நினைத்தான்.உடனே தனது கால்சட்டை பையில் எவ்வளவு சில்லறை தேறும் என்று பார்த்தான். அலிபாபா குகை போன்ற அவனது பாக்கெட்டில் வறுத்த கடலை, இலந்தை வடை,சோடா மூடி ஆகிய வஸ்துக்களும் அவற்றின் நடுவே சில்லறையாக 20 ரூபாயும் தேறியது.உடனே, பதுங்கி பதுங்கி ஊர் சாவடி வந்தான்.அவன் வரவும் டவுன் பஸ் வரவும் சரியாக இருந்தது.அதில் தொற்றி கொண்டான்.பக்கத்தில் உள்ள பெரிய ஊரான மூக்கறுத்தான்பாளையத்தை அடைவது அய்யாவின் எண்ணம்.               அந்த ஊரை அடைந்ததும் டீ கடையில் அஞ்சு சமோசா, ஒரு டீ அமுக்கினான்(அதற்குமேல் வயிற்றில் இடம் இருந்தது, பைசா தான் இல்லை).பிறகு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.அவன் அருகில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த சாமியார் போன்ற ஒரு பெரியவர் மயங்கி விழுந்தார்.பா.கு அவரை முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப, முழித்தவர் "சுகர் சுகர்" என்றார். பா.கு உடனே டீக்கடையில் இருந்த சர்க்கரையை அள்ளி அவர் வாயில் போட்டான்.சிறிது நேரத்தில் அந்த மனிதர் தெளிவாகி எழு

பாண்டிக்குட்டி

        பாண்டிக்குட்டியை உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? பரவாயில்லை, அதற்காக நீங்கள் வருத்தப்படுகின்ற அளவு அவன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை.எனக்கு அவனை நன்றாக தெரியும்.அவனின் சாகசங்கள் பல உள்ளன.அவற்றில் ஒன்றை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.        முதலில் பெயர்க்காரணம். அவனது உண்மையான பெயர் பாண்டி.வருடங்கள் ஓடினாலும் அவன் பார்க்க ஆள் சிறியதாக இருந்ததால் அந்த குட்டி அவன் பெயரில் சேர்ந்து கொண்டது . அது மட்டும் இல்லாமல் அவனை அவன் தாய் பாண்டியம்மாள் செல்லமாய் "குட்டி, குட்டி" என்று அழைத்ததும் ஒரு காரணம்.நீங்கள் புத்திசாலியாய் இருந்தால் இந்நேரம் அவன் தந்தை பெயர் பாண்டியப்பன் என்பதை எளிதாக கண்டுபிடித்திருப்பீர்கள்.ஊரில் அவர்கள் குடும்பத்தை பாண்டி அன்ட் கோ என்று தான் அழைப்பார்கள்.           பாண்டிக்குட்டி படிப்பில் படு கெட்டி. எந்த அளவிற்கென்றால் 5 ஆம் வகுப்பை 5 வது தடவையாக படிக்கிறான் . இதோ இன்று அவனுடைய முழு ஆண்டுத்தேர்வின் கடைசி பரீட்சையான சமூக அறிவியல்.அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐயா அளித்த பதில்களும் தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் பதிக்கப்பெற வேண்டியவை . உங்கள் பார்

கொரோனாவும் சிராகிகசுவும்!

         அதாகப்பட்டது மஹாஜனங்களே !  இந்த கொரோனா அட்டகாசத்தின் நடுவே நாம் ஒரு அட்டகாசமான(?) கதையை பார்ப்போம்.           நம்ம கதையின் நாயகன் சிவராமக்ரிஷ்ணகணபதிசுப்ரமணியன்.சுருக்கமாக  சிராகிகசு.நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு சிவா.ஐடி  நிறுவனத்தில் பணி . கொரோனா ஆட்டம் தொடங்கியதும்  அவனது மேலாளர் மன்னார்குடி மாத்ருபூதம் அழைத்தார் .அவர்களுக்கு இடையே நடந்த சம்பாஷணை இதோ. மேலாளர் ம.மா: மிஸ்டர் சிவா! நான் உன்னை  எதற்கு அழைத்தேன் என்றால் ... சிவா : சார் , அந்த பொண்ணு லல்லி சொல்வது எல்லாம் பொய் .நான் அவகிட்ட ப்ரொபோஸ் எல்லாம் செய்யல. வாங்க லல்லி, கேன்டீன்ல காபி குடிக்க போலாம்னு தான் சொன்னேன் மேலாளர் ம.மா: இந்த கருமம் வேறயா? நான் உன்னை அதுக்கு கூப்பிடல. கொரோனா பரவரதால எல்லாரையும்  work from home  செய்ய சொல்றாங்க.நீ நாளைலருந்து ஆபீஸ் வராதே .வீட்ல இருந்து வேல பாரு சிவா: சார் என்னால வீட்ல இருந்து வேல செய்ய முடியாது, ரொம்ப கஷ்டம் மேலாளர் ம.மா: ஆமா, நீ ஆபீஸ் வந்தா மட்டும்  வேல செஞ்சு கிழிச்சிடுவ . சொன்னத செய்.அதுமட்டுமில்ல சிவா, அந்த லல்லி உனக்கு அக்கா மாதிரி, என்னை உன் மாமாவா நெனச்சுக்கோ, புரியுதா

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)

          கிருஷ்ணன் இல்லாமல் பாண்டவர்கள் போரில் ஜெயித்திருக்க முடியாது என்பது மஹாபாரதம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.பாரதப்போரில் அர்ஜுனனின் சாரதியாக இருந்து அவனை பல அபாயங்களில் இருந்து கிருஷ்ணன் தான் காப்பாற்றுகிறான். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் போர் உக்கிரமாக நடக்கிறது.அப்போது அர்ஜுனன் எய்யும் அம்பு பட்டு கர்ணனின் தேர் பல அடி தூரம் தள்ளி செல்கிறது.அப்போது கிருஷ்ணன் புன்னகைக்கிறான் . பதிலுக்கு கர்ணன் எய்யும் அம்புபட்டு அர்ஜுனன் தேர் சில அடி தூரம் பின்னால் செல்கிறது.அதற்கு கிருஷ்ணன் "ஆஹா! பிரமாதம்" என்று  பாராட்டுகிறான். நமது அர்ஜுனனுக்கோ எரிச்சல்.கிருஷ்ணனை பார்த்து "கிருஷ்ணா! என்ன கொடுமை இது! என் அம்பு வீச்சு கர்ணன் தேரை பல அடி பின்னால் தள்ளும்போது நீ வெறுமனே சிரிக்கிறாய்.அதுவே அவன் அம்பு நம் தேரை சில அடி தள்ளினால் அவனை பாராட்டுகிறாய்.ஏன்?" என்கிறான்.            கிருஷ்ணன் புன்னகைத்து சொல்கிறான், "அர்ஜுனா!  உனது தேரின் கொடியில் பராக்கிரமசாலியான அனுமன் இருக்கிறான்.சாரதியாக நான் இருக்கிறேன்.அப்படி இருந்தும் கர்ணனின் அம்பு நம் தேரை பின்னால் தள்ளுகிறது என்றால்

காசி யாத்திரை

 எனது மற்றும் எனது நண்பர்களின் நீண்ட நாள் கனவு சென்ற மார்ச் மாதத்தில் நனவாகியது. அதுதான் காசி பிரயாணம். சில வருடங்களாக நாங்கள் அதைப்பற்றி பேசி வந்தாலும் அதற்கு வேளை வந்தது இப்போதுதான்( விஸ்வநாதர் அருள் வேண்டுமல்லவா அந்த புண்ய மண்ணை மிதிப்பதற்கு?) பிப்ரவரி மாத இறுதியில் எங்கள் காசி பிரயாண வேட்கை தீவிரமாகி விமான பயணத்திற்கு முன்பதிவு செய்ய முயன்றோம். விமான கட்டணம் மட்டுமே ஒரு லக்ஷம் ரூபாய் அருகில் வந்ததால் திட்டத்தை கைவிட்டோம். பிறகு, நான் சென்ற வருடம் ஷீர்டி அழைத்துச்சென்ற டூர் நிறுவனத்திடம் பேசினேன. அவர்கள் சந்தோசமாக ஒப்பு கொண்டார்கள். பயண கட்டணம் ஒருவருக்கு இருபத்தி இரண்டாயிரம் என்று முடிவாகியது.மொத்தம் பனிரெண்டு பேர் திட்டமிட்டபடி மார்ச் 14 கிளம்பி 17 அன்று சென்னை வந்து சேர்ந்தோம். 14 மார்ச்: காலை 9 மணிக்கு கிளம்பி மதியம் 12 மணிக்கு காசி விமான நிலையம் அடைந்தோம். அங்கிருந்து காரில் காசியை அடைய ஒரு மணி நேரம் ஆனது. தங்கும் விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறி உணவு உண்டு மாலை சாரநாத் சென்று அங்குள்ள புத்த மத அருங்காட்சியகம் கண்டு ரசித்தோம் இரவு, நண்பர்கள் கங்கை ஆரத்தி பார்க்க சென்றுவிட

தானமும் தர்மமும் - கர்ணனின் கதை

 போரில் அர்ஜுனனின் பாணங்களால் வீழ்த்தப்பட்டு கிடக்கிறான் கர்ணன். அவன் செய்த எண்ணிலடங்கா புண்ய செயல்களால் அவன் உயிர் பிரியாமல் இருக்குமாறு தர்ம தேவதை அவனை பாதுகாக்கிறாள். இதை உணர்ந்த கண்ணன் வழக்கம்போல்  தந்திரம் செய்து கர்ணனிடம் அவன் செய்த புண்ய செயல்களின் பலன்களை தனக்கு தானமாக கேட்கிறான். இல்லை என்று சொல்ல மனம் இல்லாத தர்மவான் கர்ணன் அப்படியே செய்கிறான். இந்த விஷயத்தில் அர்ஜுனனுக்கு ஒரு கேள்வி எழுகிறது(அவனுக்கு மட்டும் இல்லை நம்மை போன்ற பலருக்கும் வரும் சந்தேகம் தான்). "கர்ணன் செய்த புண்ணிய செயல்கள் அவன் உயிரை காத்து நின்றன. அப்படி இருக்கையில் அவன் செய்த மொத்த புண்ய செயல்களின் பலனையும் உனக்கு தானமாக கொடுத்தான் என்றால் அந்த தானத்தின் பலன் மிக பெரியது  அப்படி இருக்கையில் அவன் எப்படி இறந்தான்?" என்று கண்ணனிடம் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த மாயக்கண்ணன் புன்னகையுடன் சொல்கிறான் "கேள் அர்ஜுனா! உலகத்தில் தானம் தர்மம் என்று இரண்டு விஷயங்கள் உள்ளன பிறர் கேட்டு நாம் கொடுப்பது தானம் ஒருவன் கேட்காமலே அவனுக்கு உதவி செய்தல் தர்மம் அதனால் தானத்தை விட தர்மம் உயர்ந்தது , பலன் மிக்கது .நா

சகுனி பற்றி தெரியாத தகவல்கள்

 மஹாபாரதத்தில் கண்ணனுக்கு இணையாக ஒரு கதாபாத்திரமாக நாம் சகுனியை கருதலாம். கௌரவர்களின் பக்கம் நின்று துரியோதனனுக்கு பக்கபலமாக இறுதி போர் வரை இருந்தவன் சகுனி. ஆனால் சகுனி உண்மையில் யார்? கவ்ரவர்களின் வெற்றியை விரும்பியவனா? இல்லை என்கிறது அவன் வரலாறு. காந்தாரியின் உடன் பிறந்த சகோதரர்கள் மொத்தம் நூறு பேர்.சில காரணங்களால் அவர்கள் அனைவரும் கௌவரவர்களால் சிறை பிடிப்பிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்த்து சிறிதளவு உணவே தினமும் வழங்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து அனைவரிலும் இளையவனான சகுனியை காப்பாற்ற  முடிவெடுக்கிறார்கள். அதன்படி அந்த உணவு அவனுக்கு கொடுக்கப்படுகிறது. சகுனியின் தந்தையின் தொடை எலும்பில் இருந்து செய்யப்பட்டது தான் அவன் வைத்திருந்த பகடை. அதனால் அது அவன் என்ன எண்ணை சொல்கிறானோ அதை தான் காட்டும். இதை வைத்து கௌரவர்களை அவன் எப்படி அழித்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆக, ஆகாத கௌரவர்களை உறவாடி கெடுத்தவன் சகுனி.